தங்கத்துடன் மாலைத்தீவு பிரஜை உட்பட இருவர் கைது

258 0

சட்ட விரோதமான முறையில் தங்க நகைகளை மாலைத்தீவில் இருந்து எடுத்துச் வர முயற்பட்ட இருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும் 46 வயதுடைய மாலைத்தீவு பிரஜை ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (06) இரவு 6.20 மணிக்கு மாலைத்தீவில் இருந்து வருகை தந்த EK 652 விமானத்தின் மூலம் பயணத்தை மேற்கொள்வதற்காகவே சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 3,148,810 ரூபா 233 கிராம் எடையுடைய பெறுமதியான தங்க பிஸ்கட்கள் இரண்டும் தங்க மாலைகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment