பல்லிகுடா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் அறையில் புதையல் தோண்டும் பணி இடம் பெறுவதாக நேற்று பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 28, 31 மற்று 43 வயதுடைய  தங்காலை , லுணுகம்வெஹெர , ஹங்கம மற்றும் கன்தர ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.

மேலும் , அவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணம் மற்றும் பூஜைப்பொருள்கள் என்பன பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், சந்தேக நபர்கள் இன்று தங்காலை நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.