சிங்கப்பூர் ஒப்பந்தம் சிங்கள, தமிழ் மொழியில் வெளியிடப்படும்-பந்துல

357 0

சிங்கப்பூர் ஒப்பந்தத்தின் சிங்கள, தமிழ் பிரதிகள் எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் வெளியிடப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு அல்லது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தங்களை ஒருபோதும் அணுகப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேசிய வியாபார கொள்கையை உருவாக்கும் குழு உறுப்பினர்களின் பெயர்கள் அனுமதிக்காக அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்களில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவது முதன்மையான நோக்கமாகும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment