க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 3 ஆம் திகதி ஆரம்பம், நாடு முழுவதும் 4661 பரீட்சை நிலையங்கள்

309 0

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு இம்முறை 656641 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையில் நாடு முழுவதிலுமுள்ள 4661 பரீட்சை மத்திய நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளன.

இம்முறை பாடசாலை பரீட்சார்த்திகள் 422850 பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 233791 பேரும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். 541 இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கான சகல அனுமதிப் பத்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment