வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

24053 0

யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவர்களை கனகராயன்குளம் பொலிஸார் இன்று  அதிகாலை கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  யாழ் – புத்தளம் நோக்கி சென்ற கப் ரக வாகனத்தை கனகராயன்குளம் பகுதியில் வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது அவ் வாகனத்தில் பயணித்த புத்தளத்தை சேர்ந்த 20, 25 வயதுடைய  இரு இளைஞர்களை 13 பொதி செய்யப்பட்ட கேரளா கஞ்சாவுடன் கைதுசெய்த பொலிஸார் அவர்கள் பயணித்த வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment