பாராளுமன்ற தேர்தலை நடத்தக் கொரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட பேரணி

297 0

பாராளுமன்ற தேர்தலை நடத்துமாறு தெரிவித்து இன்று கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பேரணி இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி காக்கா கடை சந்தியிலிருந்து ஆரம்பித்து ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி  பஸ் நிலையம் வரை சென்றது. இதன்போது  பாராளுமன்ற தேர்தலை நடதுமாறும், ரணிலை வெளியேறுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினர்.

பேரணியில் வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் தர்மபால செனவிரத்தின உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதன்போது வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் தர்மபால செனவிரத்தின உள்ளிட்டோர், பாராளுமன்ற தேர்தலை நடார்த்துமாறும் தெரிவித்தும், கரு ஜேயசூரியவின் செயற்பாடுகளைக் கண்டித்தும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

Leave a comment