பிரான்சில் மாவீரர் நாள் 2018 நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வுகள்

652 0

ரான்சில் மாவீரர் நாள் 2018 நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வுகள் வழமைபோல் பந்தனில் அமைந்துள்ள கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் கல்லறைகளுக்கு அருகில் இடம்பெற்றன.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் ஆகிய மாவீரர்களுக்கான பொதுச்சுடரை திரான்சி தமிழ்ச்சங்கத்தலைவர் திரு.கணேஸ்தம்பையா அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரை கப்டன் கஜன் அவர்களின் சகோதரர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.
சமநேரத்தில் கேணல் பரிதி அவர்களுக்கான ஈகைச்சுடரை இரண்டு மாவீரர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து, பிற்பகல் 13.36 மணிக்கு மணி ஒலித்ததையடுத்து மாவீரர் துயிலும் இல்லப் பாடல் ஒலித்தது. தொடர்ந்து அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

Leave a comment