முல்லைத்தீவு மாவட்டத்தின் இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில்,இந்த ஆண்டிற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றது.
இதன் போது,இரண்டு மாவீரர்களின் தாயாரான மரியதாஸ் மேரிமெற்ரலின் பொதுச்சுடரினை ஏற்றி,நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து,ஏனைய மாவீரர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.