மாவீரர் நாள் இன்று அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இராணுவத்தினரின் 51 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைந்துள்ள கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக நினைவுச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் வடக்கு மாகண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.இதன்போது மாவீரரரின் பெற்றோர்களில் ஒருவரான ஜெயக்குமாரியினால் மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
இதனைத்து தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டவர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.இதன்போது, முன்னாள் வடக்கு மாகண சபை அமைச்சர் அனந்தி சசிதரனும் நினைவேந்தலில் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினார்.