சு.க. உறுப்பினர்கள் தொடர்பில் வதந்திகளை பரப்புகின்றனர் – ரோஹன லக்ஷ்மன் பியதாச

382 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுகின்றனர் என குறிப்பிடுகின்றமை உண்மைக்கு புறம்பான செய்தியாகும் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

 

மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்தே செயற்படுவார்கள் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற அரசியல் செயற்பாடுகளை தவிர்க்கும் முகமாகவே ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினார். ஆனால் எதிர் தரப்பினர் அதனை அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்து விட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment