ஹன்சார்ட்டிற்கு அமைவாக தற்போது நாட்டில் அரசாங்கம் இல்லை!

337 0

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமர் என்றும், அவரது சகாக்களை அமைச்சர்கள் என்றும் தாமே குறிப்பிட்டுக் கொள்வது யாப்புக்கு முரனாணதாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

 

மேலும் கடந்த 15 ஆம் திகதி மற்றும் 16 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளின் ஹன்சார்ட்டிற்கு அமைவாக தற்போது நாட்டில் அரசாங்கம் என்பதொன்று இல்லை.

பிரதமர், அமைச்சர், பிரதி அமைச்சர், இராஜங்க அமைச்சர், அவைத் தலைவர், ஆளுங்கட்சி, பிரதமகொரடா போன்ற பதவிகளும் நடைமுறையில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment