விடுவிக்கப்பட்டார் சிவாஜிலிங்கம்

373 0

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாட முயன்றார் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் விடுவிக்கப்பட்டார்.

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பிறந்த நாளை கொண்டாட முயன்றார் என்ற குற்றச்சாட்டில் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் , இன்று காலை கைது செய்யப்பட்டார்.

அதன் போது அவர் வசம் இருந்த பிறந்தநாள் கேக் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்த பொலிஸார் , அவரை கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

பொலிஸ் நிலையத்தில் வைத்து , மேலதிக நடவடிக்கை குறித்த அறிவுறுத்தல்களை பின்னர் வழங்குவதாக கூறி சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அனைவரையும் பொலிஸார் விடுவித்துள்ளனர்.

Leave a comment