மட்டக்களப்பு காத்தான்குடியில் சடலம் மீட்பு(படங்கள்)

383 0

batti-body

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை பகுதியில் வயோதிபர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பயில்வான் பள்ளிவாயல் கடற்கரை பகுதியில் இருந்து கல்முனை சாய்பு வீதி கல்முனை குடியை சேர்ந்த 60 வயதுடைய சீனி முகமது மொயிதீன் பாறுக் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

 

குறித்த நபர் வியாபார நோக்கத்துடன் காத்தான்குடி பகுதிக்கு வந்துள்ள நிலையிலே சடலமாக கடற்கரை பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

batti-body-0குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் தடய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

batti-body-01