நாடு திரும்பினார் ஜனாதிபதி

284 0

ms-2ஐக்கிய நாடுகளின் 71வது பொது அமர்வில் கலந்து கொள்வதற்காக நிவ்யோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று மாலை நாடு திரும்பியுள்ளார்.

கடந்த 18ஆம் திகதி அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி பொது அமர்வில் உரையாற்றியிருந்தார்.

அத்துடன், இந்த விஜயத்தின் போது, பல உலக நாட்டுத் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவு உட்பட பல விடயங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய நாடுகளின் பொது அமர்வில் இரண்டாவது முறையாக ஜனாதிபதி உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.