இருவேறு விபத்துக்களில் இருவர் பலி

277 0

கல்கிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (20) இரவு வேன் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியில் பயணித்த களுபோவில வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

62 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியின் தாகொன்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி ஒருவருடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 66 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a comment