காலி மாநகர சபையில் 7 ஐ.தே.க. உறுப்பினர்கள் வழங்கிய ஆதரவு வாபஸ்

286 0

காலி மாநகர சபையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆட்சியமைக்க ஆதரவு வழங்கிய 7 உறுப்பினர்கள் இதன்பிறகு ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு குழுவாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.

இதனையடுத்து, இவர்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையும் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு மாநகர சபைக்குத் தெரிவானதன் பின்னர் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்தனர். இவர்களே மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவாக மாநகர சபையில் செயற்பட தீர்மானித்துள்ளனர்.

காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அரசியல்வாதியொருவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து 07 பேரும் இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a comment