இன்றும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க-சஜித்

261 0

தோல்வியை அறிந்திருந்த குழுவினர் இன்று அடக்குமுறையில் ஈடுபட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

இன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இன்மையால் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் ஆவேசத்துடன் செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்திற்குள் ஜனநாயத்திற்கு ஜனாதிபதி இடமளித்துள்ளதை காண முடிந்துள்ளதாகவும், நேற்று ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட அறிக்கை மூலம் இந்த விடயம் தௌிவாகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்றைய தினம் முக்கிய சவாலை வெற்றி கொண்டதாகவும், தனக்கு இன்றும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

Leave a comment