ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு, இன்று கொழும்பு விஷேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இது தொடர்பான மனு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று (15) விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
வழக்கின் நான்காவது சாட்சியாளரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திதஸ்ஸவிடம் இன்று சாட்சி விசாரணை இடம்பெற்றதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
இதனையடுத்து மேலதிக சாட்சி விசாரணைகள் நாளைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி வரையான காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகள் குற்றமிழைத்துள்ளதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

