எதிர்காலத்தில் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் எண்ணங்களுடன் சிலர் உள்ளனர் -அமைச்சர் சம்பிக்க

286 0

champika2நாட்டில் பிரிவினைவாதம் தோன்றுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் எண்ணங்களுடன் நபர்கள் இன்று நாட்டில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறானவர்களின் நோக்கங்களை தோல்வியுறச் செய்வதற்காக எந்தவொரு போராட்டத்திற்கும் தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் தெற்கில் உருவாகியுள்ள இனவாத குழுவினர்கள் தொடர்பில் கலவரம் அடையத் தேவையில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.