ஓடையில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுப்பு

249 0

இங்கிரிய, கங்கபட பிரதேசத்தில் ஓடையொன்றில் மிதந்து கொண்டிருந்த ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக  செய்தியாளர் கூறினார்.

இன்று காலை அந்த வீதியால் பயணித்த நபர் ஒருவர் சடலத்தைக் கண்டு இங்கிரிய பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கங்கபட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் ​நேற்று குறித்த இடத்திற்கு குடும்ப உறுப்பினர்களுடன் குளிக்கச் சென்றுள்ள நிலையில், குளித்து முடிந்த பின்னர் குடும்பத்தினரை வீட்டுக்கு அனுப்பி விட்டு அவர் நண்பர் ஒருவரை சந்திப்பதாக கூறி அங்கு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment