ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி நாளைமறுதினம் பாராளுமன்றம் கூடியிருந்தாலும் கரு ஜயசூரிய தனது கட்சி சார்பாகவே செயற்பட்டிருப்பார். எனவே தான் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

பிரதமர் மஹிந்தராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் உறுப்புரிமையை ஏற்றிருந்தாலும் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்தே செயற்படுவார். அவ்வாறு இணைந்து செயற்படுவராக இருந்தால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக அவரையே களமிறக்குவோம். எனினும் சின்னம் குறித்து அடுத்த கட்டங்களில் தீரமானிக்கப்படும் என்றார்.