இரு பிரதான கட்சிகளிலும் நோக்கும் இலக்கும் இல்லாதவர்கள்- அத்துரலிய தேரர்

289 0

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றில் இருக்கின்றவர்கள் எந்தவொரு நோக்கும் இலக்கும் இல்லாதவர்கள் எனவும், இவர்கள் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு மாறுவதனால் நாட்டில் மாற்றமொன்று உருவாவதில்லையெனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அரசியல் உயர் பீட அங்கத்தவருமான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டிலுள்ள அரசியல்வாதிகளுடன் எந்தவொரு பயணத்தையும் தான் தொடர்வதற்கு தயாரில்லை. இந்த நாட்டிலுள்ள அரசியல்வாதிகளிடையே சுயநலவாதிகளும், குடும்ப செல்வாக்கை பலப்படுத்துபவர்களும் தான் இருக்கின்றார்கள்.

இந்த நாட்டுக்கு புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும். நான் நினைத்த மூப்பில் இதனை முன்னெடுக்க முடியாது. எதிர்காலத்தில் பலருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் பின்னரேயே எனது நிலைப்பாட்டைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment