கடிகார கம்பத்தில் மோட்டார் வாகனம் மோதி ஒருவர் பலி

229 0
திருப்பனை பகுதியில் இடம்பெற்ற் மோட்டார் வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (11) அதிகாலை 1.05 மணியளவில் அநுராதபுரம் – திருப்பனை வீதியின் கல்குளம் சந்தியில் உள்ள கடிகார கம்பத்தில் மோட்டார் வாகனம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் வாகன ஓட்டுனரை அநுராதபுலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அவுகன பகுதியை சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திருப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment