இபோச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை-நிமல்

188 0
இலங்கை போக்குவரத்துச் சபையின் ஊழியர்கள் அனைவரினதும் சம்பளத்தை அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

சாரதி, நடத்துனர், தொழில்நுட்பவியலாளர், தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரினதும் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.

14250 ரூபாவான அடிப்படை சம்பளம் 25550 ரூபா வரை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் நிறைவேற்று உத்தியோகத்தர்களின் சம்பளமும் இதுபோன்று அதிகரிக்கப்பட உள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

புதிய சம்பள முறை வௌியிடும் நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

Leave a comment