சிறிசேனவினால் மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

302 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஊடகத்துறை மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சையும், அதனுடன் தொடர்புடைய சகல நிறுவனங்களையும், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஊடகத்துறை மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சின் அமைச்சராகவும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் தயாசிறி ஜயசேகரவே செயற்படவுள்ளார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சியே செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment