அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போகும் மஹிந்த அணி

297 0

wduwasuஅமைச்சரவை அனுமதியின்றி அரசாங்கம் இந்த முறை வெளியிட்டுள்ள வற் வரி வர்த்தமானிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக மஹிந்த ஆதரவு அணியினர் தெரிவித்துள்ளனர்.

அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த 9ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் அமைச்சரவை அதற்கு கடந்த 13ஆம் திகதியே அனுமதி வழங்கியுள்ளது. இந்த தடவையும் அமைச்சரவை அனுமதியின்றி தன்னிச்சையாக வற் வரி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனதெரிவித்துள்ளார்.