தொல் திருமாவளவன், விக்கினேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடினார்(காணொளி)

502 0

தமிழ்நாடு விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள திருமாவளவன், பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.

அந்தவகையில் இன்று காலை கனகரத்தினம் மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த திருமாவளவன், அங்கு முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது திருமாவளவன், முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இதனையடுத்து கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் மரங்கள் நாட்டும் நிகழ்வில், முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடன் இணைந்து மரங்களை நாட்டி வைத்திருந்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐங்கரநேசன், பாடசாலை அதிபர்- ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment