மன்னாரில் நீர் நிறைந்த குழிக்குள் விழுந்து இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மன்னார் தோட்டவெளி பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தோட்டவெளியில் உள்ள குறித்த நீர் நிறைந்த குழிக்கு நீராடச்சென்ற வேளையிலேயே குறித்த சிறுவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த இரு சிறுவர்களும் 7 மற்றும் 8 வயதுடையவர்கள் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.