இரு குழுக்களிடையே மோதல்

196 0

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரில் நேற்றிராவு 8 மணியளவில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த சில தினங்களாகவே குறித்த இரு குழுக்களுக்கும் பரஸ்பரம் கருத்து முரண்பாடுகள் இருந்து வந்ததாகவும் அதன் விளைவாக இம் மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் கைதுசெய்யப்பட்ட மூவரையும் இன்று அதிகாலை நிபந்தனைகளுடன் விடுதலை செய்துள்ளதாகவும் பொலிஸார தெரிவித்தனர்.

Leave a comment