அரசியல் கைதி இடமாற்றம்

295 0

jail

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் போகம்பரை சிறைச்சாலைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணை நடைபெறவுள்ளதால் குறித்த தமிழ் அரசியல் கைதி போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

 
இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் ஏனைய 16 தமிழ் அரசியல் கைதிகளும் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் 17 பேரும் கடந்த 21 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தமது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் வலியுறுத்தி கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.