நியாயமான சம்பளத்தை வழங்ககோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

288 0

tea

நியாயமான சம்பளத்தை தமக்கு வழங்ககோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவடந்து 18 மாதங்கள் கடந்துள்ளபோதிலும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் 09 சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.

 

எனினும் குறித்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தன.
இந்நிலையில், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளத்தை வழங்க முதலாளிமார் சம்மேளனம் மறுத்து வருகின்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டமானது பொகவந்தலாவ, தோட்ட தொழிலாளர்களால் தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் இடம்பெற்றது.

 
இதில் சுமார் 100கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தமது சம்பளத்தை பெற்றுக்கொள்ளும்வரை போராடுவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.