கத்திக்குத்தில் இரு பிள்ளைகளின் தந்தை பலி

218 0

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோட்டன் தெபட்டன் தோட்டப் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (06-11-2018) மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கத்திக் குத்திற்கு இலக்காகியவர் 38 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான சண்முகம் விஸ்வநாதன் என நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறித்த தோட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் கத்திக்குத்தை மேற்கொண்ட சந்தேக நபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு இறுதியில் மோதலாக மாறியதில் இந்தக் கத்துக் குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதோடு சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Leave a comment