தங்க நகைகளுடன் ஒருவர் கைது

540 0
சட்ட விரோதமான முறையில் விஷேடமான விதத்தில் தயாரிக்கப்பட்ட தங்க நகைகளை சிங்கப்பூரிற்கு எடுத்துச் செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பகுதியை சேர்ந்த 51 வயதான ஒருவரே இவ்வாறு கைத செய்யப்பட்டுள்ளார்.

இன்று (06) காலை 11 மணிக்கு சிங்கப்பூர் நோக்கி பயணிக்கவிருந்த UL 307 விமானத்தின் மூலம் பயணத்தை மேற்கொள்வதற்காகவே சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் எடையுடைய 8,998,740 ரூபா பெறுமதியான தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment