பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் கைது

179 0

போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்

இச் சம்பவத்தில் வெலிசரையை சேர்ந்த 31 வயதுடைய பெண்ணொருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வேகமாக பயணித்த பெண்ணை பொலிஸார் ராகமை ரயில் கடவைக்கு அருகில் வைத்து மடக்கிப் பிடித்தபோது, குறித்த பெண் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதோடு, பொலிஸாரின் கடமைகளுக்கும் இடையூறு விளைவித்தார்.

இதனால் அப் பெண்ணை கைதுசெய்து பொலிஸார் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment