தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக தமிழ் வர்த்தக சமூகத்தினரிடமும் சமூக நலப்பணியாளர்களிடமும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
பிரதமர் செயலகத்தில் தம்மைச் சந்தித்த தமிழ் வர்த்தக சமூகத்தினர், சமூக நலப்பணியாளர்கள், புத்திஜீவிகளுடனான சந்திப்பில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்து சென்று கொண்டிருந்ததால் அதிலிருந்து மீட்டெடுப்பதற்காகவே பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றதாகக் கூறிய அவர், இந்த நாட்டு மக்கள் அனைவரும் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு சகலரும் அந்நியோன்னியத்தையும் சகோதரத்துவத்தையும் வளர்த்து, தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்

