புதிய வீட்டுத் திட்டத்திற்குள் அத்துமீறி உட்புகுந்தவர்களுக்கு எதிராக முறைப்பாடு

240 0
கடந்த அரசாங்கத்தின் போது மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கிட்டில் மனிதவள அபிவிருத்தி ஸ்தாபனத்தின் ஊடாக நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா புளியாவத்த நியூட்டன் தோட்ட பகுதியில் புனரமைக்கபட்ட 20 தனிவீட்டு திட்டத்திற்குள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் அத்துமீறி உட்புகுந்துள்ளமையால் நியூட்டன் தோட்ட முகாமையாளர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த முறைப்பாடு நேற்று (02) வெள்ளிகிழமை மாலை பதிவு செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் நிதி ஒதுக்கபட்டு இந்த 20 தனி வீட்டுத் திட்டமும், முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிது ஒதுக்கீட்டில் ஏழு பேச்சர்ஸ் காணியின் மூலமாகவும் இந்த வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கபட்டது.

ஆனால் கடந்த 26ம் திகதி நாட்டில் ஏற்றபட்ட அரசியல் மாற்றம் காரணமாக குறித்த வீடமைப்பு திட்டங்கள்இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஆதராவளர்கள் வசம் போய்விடும் என்ற பயத்தில் குறித்த தோட்ட பகுதியை சேர்ந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் அத்துமீறி உட்புகுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த வீடமைப்பு திட்டத்திற்காக எங்கள் சொந்த பணத்தையும் நாங்கள் செலவு செய்திருக்கின்றோம். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் காரணமாக இந்த வீடமைப்பு திட்டங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்க முடியாது.

ஆகவே தான் நாங்கள் இவ்வாறான ஒரு முடிவை மேற்கொண்டதாக வீடமைப்பு திட்டத்திற்குள் உட்புகுந்த மக்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸாரினால் பதிவு செய்யபட்டுள்ள வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

எனினும் சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் எவரும் கைது செய்யபடவில்லை எனவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment