சரத் அமுனுகமவை சந்தித்த சார்க் நாடுகளின் தூதுவர்கள்

233 0

சார்க் நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம சந்தித்தார்.

அவரது அலுவலகத்தில் நேற்று (31) இந்த சந்திப்பு இடம்பெற்றது.

பரஸ்பர விருப்புக் கொண்ட விடயங்களைக் கலந்து ஆலோசிப்பதற்காக இந்த தருணத்தில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, மாலைத்தீவுகள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதவர்களும் அவர்களது பிரதிநிதிகளும் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கான செயலாளர் ரவிநாத ஆரியசிங்க கலந்துகொண்டார்.

Leave a comment