ஜாதிக கெல உறுமய கட்சித் தலைவர் பதவி விலகல்

366 0

omalpe-sobithaஜாதிக கெல உறுமய கட்சித் தலைமையிலிருந்து பதவி விலகப்போவதாக, ஒமல்பே சோபித தேரர் அறிவித்துள்ளார்.

ஜாதிக கெல உறுமயவின் 13ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், கட்சிக்காக புதிய தலைமையை உருவாக்கும் நோக்கில் தான் பதவி விலகப்போவதாகவும், தொடர்ந்தும் தான் ஜாதிக கெல உறுமயவிற்காக பணியாற்றுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கட்சியின் இணைத்தலைவர்களாக, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதானவும், வண.ஹடிகல்லே விமலசார தேரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க, கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.