வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு

210 0

வவுனியா பிரமனாளங்குளம் நீலியாமோட்டை பகுதியிலுள்ள தனியார் காணியிலிருந்து வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா பிரமனாளங்குளம் நீலியாமோட்டை  பகுதியிலுள்ள தனியார் காணியினை இன்றைய தினம்  காலை 9.30 தொடக்கம் நிலத்தை பண்படுத்தும் போது அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு இருப்பதனை அவதானித்த காணியின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் அப்பகுதியில்  தேடுதல் மேற்கொண்டபோது ஒரு வெடிகுண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடரிபில் மேலதிக விசாரணைகளை பறயனாளங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment