மக்கள் ஆட்சியை நிலைநாட்டும் சந்தர்ப்பம் வந்து விட்டது – ரவி

210 0

அரசாங்கத்தை பலப்படுத்துவதற்கு எதிர்பார்த்த சந்தர்ப்பம் கை கூடிவந்துவிட்டதாக தெரிவித்த ரவி கருணானாயக்க, இனிமேல் உறுதியான மக்கள் ஆட்சியை ஏற்படுத்தவும் ஐக்கிய தேசிய கட்சி மக்களுக்கு பெற்றுக் கொடுத்த வாக்குறுதிகளை நிலைநாட்டுவதற்கான காலம் வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பட்டார்.

மேலும் நிறம் மற்றும் கட்சி வேறுப்பாடுகளை அகற்றி அனைத்து இன மக்களும் நாட்டின் ஜனநாயகத்துக்காக ஒன்றிணைய வேண்டும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலையினை சீர் செய்ய வேண்டுமானால் உடனடியாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும். பாராளுமன்றத்தை கூட்டினால் மாத்திரமே மக்களின் பலத்தை நிரூபிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னனியினர் இன்று அலரிமாளிகை வட்டாரத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

Leave a comment