அவிஸ்ஸாவெல்ல, கெட்டதொன்ன பகுதியில் கூரிய ஆயுதத்ததால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (29) இரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவிஸ்ஸாவெல்ல, மாதொல பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணமே அல்லது கொலை செய்தவர்கள் தொடர்பிலே இதுவரையில் தகவல்கள் எதுவும் தெரியவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் அவிஸ்ஸவெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.