காமினி செனரத்தின் மேன்முறையீட்டு மனு 02ம் திகதி

208 0

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றுவதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 02ம் திகதி அறிவிப்பதாக விஷேட மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி வரையான காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகள் குற்றமிழைத்துள்ளதாக சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment