தெமட்டகொட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழப்பு

221 0

தெமட்டகொட பெட்றோலிய கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மூவர் தேசிய வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் ஆர்.ஈ.ஏ. ராஜபக்ஷ என இனங்காணப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூட்டுத்தாபனத்திற்குள் வருகை தரும் சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலமையை அடுத்து அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதனால் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Leave a comment