அரசின் எந்தவொரு நிர்வாக பதவியையும் கோட்டாபய ஏற்க மாட்டார்– ஊடகப் பேச்சாளர்

238 0

“அரசாங்கத்தின் எந்தவொரு நிர்வாக பதவியையும் கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மாட்டார்” என கோட்டாபய ராஜபக்ஷவின் ஊடகப்பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபகஷவுக்கு பாதுகாப்பு செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே மிலிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“ஆனால், ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவார்” என கோட்டாபய ராஜபக்ஷவின் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment