மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சுற்று வேலி அமைக்கும் பணிகள் ஆரம்பம்

5166 0

மாவீரர் தினத்தை நினைவு கூறும் வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழர் தாயக பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெறவுள்ளது.

இந்த நிலையில் மன்னார் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின ஏற்ப்பாட்டுக்குழுவினரால் நேற்று சிரமதானம் மேற் கொள்ளப்பட்டதுடன் மாவீரர் துயிலும் இல்லத்தை சுற்றி சுற்று வேலி அடைக்கும் பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் போது மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்,மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் அப்பிரதேச இளைஞனர்களும் இணைந்து குறித்த பணியினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment