உள்ளூராட்சிமன்ற தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதற்கு முடியாது- தேர்தல்கள் ஆணைக்குழு

260 0

_91209117_mahinda-deshapriya-575-056உள்ளூராட்சிமன்ற தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதற்கு முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய பணிகள் நிறைவடைந்துள்ள போதிலும் அதனை வர்த்தமானியில் வெளியிடப்படுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இந்த ஆண்டு உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் மஹிந்த தேஷப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை 2016 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில் தமது பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றதா என்பதை அறிந்து கொள்வதற்கான காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.