பிரான்சு மட்டத்தில் நடாத்தப்பட்ட திருக்குறள் திறன் போட்டிகள்!

13387 0

தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் ஏற்பாட்டில் பிரான்சு மட்டத்தில் நடாத்தப்படும் திருக்குறள் திறன் போட்டிகள் கடந்த (21.10.2018) ஞாயிற்றுக்கிழமை இவ்றி பகுதியில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது.
முன்னதாக திணைக்கள மட்டத்தில் நடாத்தப்பட்ட திருக்குறள் திறன்போட்டிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களே குறித்த பிரான்சு மட்டத்திலான போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.
பிரான்சு மட்டத்திலான திருக்குறள் திறன்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கான மதிப்பளிப்பு தமிழ்ச்சோலை முத்தமிழ் விழாவில் நடைபெறும் என்று தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

Leave a comment