ஜனாதிபதியிடம் இருந்து ரணிலுக்கு விஷேட கடிதம்

206 0

ரணில் விக்ரமசிங்கவை உடன் அமுலுக்கு வரும் வகையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயாளர் கடிதம் ஒன்றை அனுப்பி ரணில் விக்ரமசிங்கவிற்கு இதனை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அரசியலமைப்பு திருத்தின் 42(4) சரத்தின் பிரகாரம் இலங்கை சோசலிச குடியரசின் பிரதமர் தன்னால் நியமிக்கப்படுவதாகவும், தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இலங்கை சோசலிச குடியரசின் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Leave a comment