எனக்கு பின்னாலிருந்து தாக்கும் பழக்கமில்லை – சரத்பொன்சேகா

214 0

ஜனாதிபதி கொலை சதி  குறித்து பொலிஸாரிற்கு தகவல் வழங்கிய நாமல் குமார மனோநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவித்துள்ள முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா  அவரிற்கு சிகிச்சை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்யும் சதி முயற்சியில் முன்னாள் இராணுவதளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகாவிற்கு தொடர்பிருப்பதாக நாமல் குமார தெரிவித்துள்ளார்.

கொலை சதி முயற்சி குறித்த விபரங்களை முதன்முதலில் அம்பலப்படுத்திய நாமல் குமாரவே இதனை தெரிவித்துள்ளார்.

கொலைசதி குறித்து தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா சரத்பொன்சேகாவின் நெருங்கிய நண்பர் என நாமல் குமார தெரிவித்துள்ளார்.

இந்த சதிமுயற்சியின் பின்ணயில் இருப்பவர் சரத்பொன்சேகா என்பது எனக்கு தெரியும் என நாமல் குமார தெரிவித்துள்ளார்.

சிஐடியினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் நான் சரத்பொன்சேகா குறித்து தெரிவித்திருக்கி ன்றேன் என நாமல் குமார குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையிலேயே நாமல் குமார மனோநிலை பாதிக்கப்பட்டவர் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பணியாளரான நாமல் குமாரவிற்கு மனநல பாதிப்பிற்கான சிசிச்சை அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவை ஒரு தடவையே நான் சந்தித்துள்ளேன்

அவர் பிரதிபொலிஸ்மா அதிபராக பதவியேற்ற பின்னரே இ;ந்த சந்திப்பு இடம்பெற்றது என தெரிவித்துள்ளார்.

முதல் தடவையாக சந்திக்கும் நபர் ஒருவருடன் இணைந்து  எவரும் ஜனாதிபதியை கொலை செய்;ய முயல்வதில்லை எனவும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

நான் எந்த நடவடிக்கையிலும் கண்ணிற்கு புலப்படாத விதத்தில் செயற்படுவதில்லை எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எனக்கு பின்னாலிருந்து தாக்கும் பழக்கமில்லை  நான் வெளிப்படையாக செயற்படுபவன் முன்னாள் நின்று  தலைமை வகிப்பவன் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபரிற்கு பின்னால் மறைந்திருக்கவேண்டிய தேவையி;ல்லை எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Leave a comment