ஜனாதிபதி கொலை சதி – சரத்பொன்சேகாவிற்கு தொடர்பு?

226 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்யும் சதி முயற்சியில் முன்னாள் இராணுவதளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகாவிற்கு தொடர்பிருப்பதாக நாமல் குமார தெரிவித்துள்ளார்.

கொலை சதி முயற்சி குறித்த விபரங்களை முதன்முதலில் அம்பலப்படுத்திய நாமல் குமாரவே இதனை தெரிவித்துள்ளார்.

கொலைசதி குறித்து தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா சரத்பொன்சேகாவின் நெருங்கிய நண்பர் என நாமல் குமார தெரிவித்துள்ளார்.

இந்த சதிமுயற்சியின் பின்ணயில் இருப்பவர் சரத்பொன்சேகா என்பது எனக்கு தெரியும் என நாமல் குமார தெரிவித்துள்ளார்.

சிஐடியினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் நான் சரத்பொன்சேகா குறித்து தெரிவித்திருக்கி;ன்றேன் என நாமல் குமார குறிப்பிட்டுள்ளார்.இதன் காரணமாகவே சரத்பொன்சேகா சீற்றமடைந்துள்ளார் என்னை பற்றி விமர்சனங்களை முன்வைத்துள்ளார் என நாமல் குமார தெரிவித்துள்ளார்.

Leave a comment